இப்பகுதியை, 24 3 2025 ல் பிரசுரிக்கிறேன். யோசிக்க, விசாரிக்க போதிய அவகாசம் தேவை படுகிறது.
லோட் 261 இடத்தை வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
CAF: கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள்
- இடியாப்ப சிக்கல் 1) அரசாங்கம் குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்ளும்
- இடியாப்ப சிக்கல் 2) கொடுக்க சம்மதித்தால் மட்டுமே மராமத்து செய்ய அனுமதி தருமாம்
- இடியாப்ப சிக்கல் 3) விலை இழப்பு
- இடியாப்ப சிக்கல் 4) சரவணாவுக்கு இந்த தலைவலி நிறைந்த வில்லங்க சொத்துக்கு பாடு பட விருப்பம் இருக்காது
- இடியாப்ப சிக்கல் 5) பத்திரம் யாரிடம் இருக்க வேண்டும்
- இடியாப்ப சிக்கல் 6) கார்பொரேஷன் வரி கட்டுவதில் இடியாப்ப சிக்கல்
அரசாங்க தேவை/அரசாங்க வயிற்றுவலி
அந்த இடத்தில் இன்றய நிலையில், அரசாங்கம் 10 அடிகல் எடுத்துக்கொண்டால், இன்றய அரசாங்க விலையை உரிமையாளருக்கு கொடுத்து விடுமாம்.
நமது வயிற்றுவலி அல்லது நமது தேவை
நமது தேவைக்கு பலர் பெயரில் உள்ள பத்திரத்தை பிரிக்க ஏற்பாடு செய்தால், அரசாங்கம் குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்ளும், ஆனால் எந்த பணமும் தராது. இதை எனது பெண் நண்பர் முனிசிபாலிட்டி யில் வேலை செய்பவரிடம் அறிந்து கொண்டேன்.
அது மட்டும் அல்ல, இப்பொழுது ஏதாவது கட்டிடம் போன்று ஒரு மாறுதல் அல்லது புதிதாக கட்ட வேண்டும் என்றால், அந்த அணைத்து சொத்து உரிமையாளர்கள் ஒற்றுமையாக கையெழுத்து (இறந்த உரிமையாளர் உட்பட) போட்டாலும், அரசாங்கத்துக்கு அது கேட்கும் பகுதியை, கொடுக்க சம்மதித்தால் மட்டுமே மராமத்து செய்ய அனுமதி தருமாம்.
ஒரு கற்பனை கணக்கு
சுமார் 10500 Sq Ft இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
லிங்கம் கொள்முதல் செய்த விலை
10500 X 180= 1890000
25% நிலத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டால்
2626 X 180 = இழப்பு 472500
மார்க்கெட் விலை 130 என்ற கணக்கு எடுத்தால்?
10500 X 130 = 1365000
25% நிலத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டால்
2626 X 130 = இழப்பு 341380
லிங்கம் போன்றவருக்கு, தொழில் செய்வதால் 200க்கு வாங்கினாலும் சம்பாதித்து விடுவார்.
அதனால்தான் மற்றவர்கள் பல பல கோணத்தில் யோசிக்கின்றனர்.
இப்பகுதி 29 3 2024ல் எழுதப்பட்டது
நீங்கள் ஏன் வாங்க முன்வரவில்லை? உங்களுக்கு அதில் பங்கு இருக்கிறதே? உங்கள் பங்கு போக மிச்ச தொகை கொடுத்து செட்டில் பண்ணலாமே?
நிறைய பேர் இப்படி கேட்கின்றனர். எனது பங்கு 7.5% மட்டுமே. எனது பங்கு வராமல் போனாலும் லிங்கம் வாங்கிய விலை படி எனது பங்கு படி சுமார் 150000 மட்டுமே. ஆனால், லிங்கம் விலை படி இழப்பு 472500 அல்லது மார்க்கெட் விலைப்படி இழப்பு 341380.
smart thinking என்ற பெயரில், மற்றவர்கள் பொருளாதார ரீதியாக விழுந்தால் எனக்கு என்ன என்ற எண்ணத்தில் நிறைய பேர்கள் இருக்கலாம். இது போன்ற சொத்தை, தனது பிள்ளைகள் வாங்கும்படி பரிந்துரை செய்வோமா?
நாங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று பல நல்ல உள்ளங்கள், உறவினர் சொத்தை வாங்க வேண்டாம் என்று பரிந்துரை செய்கின்றனர். ஏன் என்று கேட்டால், அவர்கள் தரும் அனுபவபூர்வமான விளக்கம் 100% ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.
எனது 7.5% பங்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் வாங்க நினைக்கிறேன், ஆனால் படு குழியில் வீழ்த்தி விடும் என்றால் 7.5% போனால் போகட்டும் என்று இருந்து விடுவதே புத்திசாலி தானம். அதுவே எனது பக்கத்துக்கு smart thinking.
நான் பெற்ற மகனே, நான் பெட்ற மகளே, எனது மகளை மணந்த மருமகனே, எனக்கு வயதாகி விட்டது. ஆகவே இந்த வில்லங்க சொத்தை முழு விலை கொடுத்து வாங்கி, எனது பங்கை கொடுங்கள் என்று இந்த சொத்தில் பங்கு உள்ள அனைவரும் இந்த கேள்வியை தானே கேட்டுக்கொண்டு உள் மன பதில் எப்படி செயல்படுகிறது என்று நீங்களே புரிந்து கொண்டால் போதுமானது.
மற்றவரின் smart thinking யில் அகப்பட்டு விட கூடாது அல்லவா?
சரவணா MAV வேலைகள் சுறுசுறுப்பாக இல்லை என்று நான் கருதுகிறேன்
உண்மையில் சரவணா நேரம் கிடைத்தால் மட்டுமே இடம் சம்பந்தமான வேலைகள் பார்ப்பார் என்று நினைக்கிறேன். மாமா மகன் குமெரேசன் மற்றும் சரவணா இருவருமே வியாபாரம் செய்யும் வயது.
ஆக சரவணாவுக்கு இந்த தலைவலி நிறைந்த வில்லங்க சொத்துக்கு பாடு பட விருப்பம் இருக்காது என்பது ஒரு அனுமானம். ஆனால், சரி செய்தால், உண்மையான விலைக்கு விற்றால், அவருக்கு மட்டுமே 11000 சதுர ஆதி சொந்தம். தொகையும் பெரிய தொகை.
பத்திரம் யாரிடம் இருக்க வேண்டும்
மாமா மகன் குமெரேசன், பத்திரம் யாருக்கு வேண்டுமோ எங்கள் லாயர் பரமிடம் பெற்று கொள்ளட்டும் என்று கூறுகிறார். சிவஞானத்துக்கே மாற்றம் செய்ததும் தெரியாது. அவனிடமும் பத்திர நகல் கொடுக்கப்பட வில்லை.
சரவணா ஒரு உரிமையாளர், போய் பத்திர பிட்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
பார்ட்னர் சேர்ந்து வாங்கும் சொத்து பத்திரம் ஒவ்வொரு பங்குதாரியிடமும் எந்த மாற்றம் செய்யும் நபர் தகவல் சொல்லி, நகல் கொடுக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.
இந்திய நாட்டில் கட்ட பஞ்சாயத்துக்கு கட்டுப்படும். மலேசியாவில் அது செல்லாது.
நான் அப்படி பிட்சை கேட்க சொல்லவில்லை என்று ஞாய படுத்தி பேச வேண்டாம்.
பாண்டுரெங்கனுக்கு போடும் இடத்து பங்கு பிச்சை
அந்த இடம் 261 வாங்கும் பொழுது, பாண்டுரெங்கன், பாண்டி பங்குதாரிகள். சுந்தராஜன் நினைவில் இல்லை. பண்டியை சட்டப்படி எனது தந்தையார் பங்குதாரியாக்கி விட்டார். பாண்டுரெங்கன் ஈரட்டில் பங்குதாரி.
உழைப்பு பாண்டி, சுந்தராஜன், பாண்டுரெங்கன் மற்றும் அணைத்து பார்ட்னர்கள் போட்டது.
சட்டப்படி போனால் பங்கு விகிதாச்சாரம் நிறைய மாறும். இடம் வாங்கிய பிறகு பாண்டுரெங்கனுக்கு 10% என்று தீர்மானித்தார் தந்தை. ஆனால், மாமா அப்பாவிடம் பல வாக்குவாதம் செய்த பிறகு, பாண்டுரெங்கனுக்கு 8% ஆக குறைத்து, மாமாவுக்கு அவரின் பங்கை உயர்த்தி உள்ளார்.
இப்பொழுது பாண்டுரெங்கனுக்கு எனது வாக்குவாதத்துக்கு பிறகு சரி 8% எடுத்துக்கொள்ளட்டும் இன்றி பிச்சை போடப்பட்டுள்ளது.
உழைத்தவனுக்கு, சம்பந்தமே இல்லாத நபர்கள் பிச்சை போடவேண்டிய நிலை உள்ளதே என்று வருந்த வில்லை. பாண்டுரெங்கன் ஒரு அடிமை போல, சட்டம் தெரிய பொறுப்பு எடுக்காமல் வாழ்ந்து விட்டதால் எனக்கு கோபம் தான் வருகிறது.
கார்பொரேஷன் வரி கட்டுவதில் இடியாப்ப சிக்கல்
ஒன்லைன் பெமென்ட் வரும் முன் நமது பகுதி பாதி வரி மட்டும் நேரடியாக கட்டி விடலாம். இப்பொழுது, முழுதும் ஒன்லைன் மூலம் வரி கட்ட வேண்டும்.
MAV பாதி ஈவு கொடுக்கும் வரை காத்து கிடக்க வேண்டும். MAV, மூன்று வருடம் கொடுக்கவில்லை எனும் காரணத்தால் வரி கட்டவில்லை என்றால், மலேசிய சட்டப்படி, இடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்.
ஈப்போவில் இதை உண்மையில் நமது வியாபாரிகள் இடம் பறிபோய் உள்ளது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
CAF என்றால் CONSIDER ALL FACTOR என்று பொருள். (அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்ளுங்கள்)
குளிர் பிரதேசம் செல்வதென்றால், குளிர் தாங்கும் ஆடைகள் தேவை படும். வெளி நாடு சென்றால் அந்த நாட்டு நாணயம் தேவைப்படும். இது போன்ற பல காரணிகளை கருத்தில் கொள்ளவேண்டும். இது ஒரு உதாரணம்.
மாமா குடும்ப சொத்தை பிரித்த போது பல காரணிகளை கருத்தில் கொண்டே பிரித்து வைத்தார்.
பிறகு ஒரு கருப்பு ஆடு, அடுத்தவன் குடும்ப சொத்தை, சொத்தின் உயிலை மாற்றி வைக்க எந்த காரணிகளையும் கருத்தில் கொள்ளாமல் ஏற்பாடு செய்தது.
நான் மலேசியாவில் மலேசிய பெண்ணை திருமணம் செய்து வைக்க தந்தையிடம் கேட்ட பிறகு, நான் திருமண வாழ்க்கையை வாழ மலேசியாவில் வீடு வாங்கினார். அவரின் மூளையை சலவை செய்த கறுப்பாடுகள் எத்தனை என்பது யாருக்கு தெரியும். இன்று அதை தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதில் உள்ள மோடிவ் சுயநலம், கௌரவம், நானே பெரியவன்-நான் சொல்வதே வேத வாக்கு என்ற ஆணவத்துக்கு தீனி, வரதட்சணை, இதை தவிர வேறு என்ன இருக்கப்போகிறது?
ஆனால் எந்த காரணிகளையும் கருத்தில் கொள்ளாமல், அவர் அவர் கட்டிங் டி வாங்கி கொடுத்து நானே பெரியவன், நான் சொல்வதே சரி. செட்டியார் பெண்ணைத்தான் இந்திய நாட்டு பெண்ணை தான் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. டார்ச்சர் செய்தனர்.
இப்பொழுது, இந்த சொத்து விற்று விட, பல டார்ச்சர் அனுபவித்து விட்டேன்.
எத்தனை இட பங்குதாரிகளுக்கு இடியாப்ப சிக்கலின் காரணிகளை முழுமையாக புரிந்து கொண்டனர்?
எனது ஒரு குரு எட்வர்ட் டீ போனோ, CAF கற்பித்தவருக்கு அவர் பாதங்களில் வணங்குகிறேன். இந்த பாடம் 1982க்கு முன் கற்று இருந்தால் எனது வாழ்வு மிக சிறப்பாக இருந்து இருக்கும். எனது உழைப்பை அன்றே 100% எனக்கு உரிமையாக்கி இருப்பேன். சந்தர்ப்பம் பார்த்து, அப்பவே விலகி நான் வேறு சுய தொழிலில் இறங்கி இருப்பேன்.
முட்டாள் தனமாக, பெரியவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை எனும் வலையில் சிக்கி இருக்க மாட்டேன்.