நீதி, தர்மம், சரி, தவறு – யார் தீர்மானிப்பது?
மனிதனின் பரிணாமப் பயணம்
மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்பது அறிவியல் உண்மை. ஆப்பிரிக்காவில் தோன்றிய நாம், உணவுக்கும் பாதுகாப்புக்கும் உலகெங்கும் பரவினோம்.
ஆடையின் பரிணாமம்-சரி தவறு யார் நிர்ணயிப்பது
நிர்வாணமாக வாழ்ந்த நாம், ஆடை, நெருப்பு போன்றவற்றை கண்டுபிடித்தோம். ஒரு காலத்தில் ஆடையின்றி வாழ்வது இயல்பாக இருந்தது. ஆதிகாலத்தில் இலைகளை ஆடையாக அணிந்தபோது, ஆடை அணிந்தவன் வித்தியாசமாக பார்க்கப்பட்டான். ஆனால் இன்று ஆடை நாகரிகத்தின் அடையாளம்.
பழக்க வழக்கங்களின் தோற்றம்-நீதி தர்மம் சரி தவறு யார் நிர்ணயிப்பது
ஒவ்வொரு பழக்க வழக்கமும் எப்படித் தோன்றியிருக்கும் என்று யோசித்ததுண்டா?
மகாபாரதத்தில் தர்மம்
நான் சோவின் மகாபாரதம் படிக்கிறேன். அதில் தர்மம், சரி, தவறு எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்பது என்னை கவர்ந்தது.
கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை
பாண்டவர்கள் யாகத்தில் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை அளித்தனர். பீஷ்மர் ஆலோசனைப்படி தர்மன் இதைச் செய்தார்.
ஜராசந்தனின் வாதம்
ஆனால் ஜராசந்தன் கிருஷ்ணனுக்கு அந்த மரியாதை தகுதியில்லை என்றான். அவன் பிறப்பை கேள்வி எழுப்பினான்.
கிருஷ்ணன் vs ஜராசந்தன்
இறுதியில் கிருஷ்ணன், ஜராசந்தன் சண்டையில் ஜராசந்தன் கொல்லப்பட்டான்.
போரின் முடிவு தீர்மானித்ததா? நீதி தர்மம் சரி தவறு யார் நிர்ணயிப்பது
வியாசர் ஜராசந்தன் பேச்சை பொய்யென சொல்லவில்லை. அவன் வாதத்தில் நியாயம் இருந்தது. ஆனால் போரில் தோற்றதால் கிருஷ்ணன் மரியாதை பெற்றது சரியானது. வலிமைதான் முடிவை தீர்மானித்ததா?
இன்றைய உலகில் அதிகாரம்
இன்றும் பணம், அதிகாரம், வயது போன்றவையே சரி, தவறை தீர்மானிக்கின்றன.
கற்பழிப்பு சரியாகுமா?
ஒருவன் கற்பழித்துவிட்டு அது சரியென்றால், பாதிக்கப்பட்ட பெண் போராடியும் அவன் வென்றால் அது சரியென ஏத்துக்கப்படுமா?
தீர்ப்பளிக்க நான் வரவில்லை
நான் தீர்ப்பு சொல்ல வரவில்லை. பெரியோர்கள் சிந்திக்க சொன்னதை நினைவுபடுத்துகிறேன். அவர்கள் எதற்கும் தீர்ப்பு சொல்ல வேண்டாம் என்றார்கள்.
மகாபாரத முடிவுகள்
மகாபாரத காலத்தில் முடிவுகள் பெரியவர்கள், முன்னோர்கள் வழிகாட்டுதலால் எடுக்கப்பட்டன.
குந்தியின் கர்ணன்
குந்தி கர்ணனை பெற்றது பெருமையாக கருதப்படவில்லை. அவனை ஆற்றில் விட்டாள்.
பாண்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன்?
மற்ற ஐந்து பாண்டவர்கள் அவள் கணவருக்கு பிறக்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ராஜ்ய வாரிசுக்காக முன்னோர்கள் சில முறைகளை அங்கீகரித்திருந்தார்கள்.
முன்னோர்களின் அங்கீகாரம்
முன்னோர்கள், அறிவார்ந்தவர்கள் என சமூகம் ஏற்றவர்கள் அங்கீகரித்தவை தவறில்லை எனப்பட்டன.
திரௌபதியின் திருமணம்
திரௌபதியை ஐந்து பேர் திருமணம் செய்ய மூன்று அறிஞர்கள் விவாதித்து சரியென ஏற்றனர். வியாசரும் அதில் ஒருவர்.
உடன்கட்டை ஏறுதல் – யார் நிர்ணயிப்பது சரி தவறு
உடன்கட்டை ஏறும் கலாச்சாரம் ஆண்களின் ஆதிக்கத்தில் ஏற்பட்ட அங்கீகாரமாக இருந்திருக்கலாம். இது பொதுவான சிந்தனைதான்.
தர்மனின் சூதாட்டம் – சரி தவறு யார் நிர்ணயிப்பது
தர்மன் சூதாடியதும் தர்மத்தின் பெயரில்தான். பெரியப்பா அழைப்பை மறுக்கக் கூடாது என்பதற்காக சூதாடினான்.
முன்னோர்கள் வழியே முடிவுகள்?
தானாக முடிவெடுப்பது தவறு. சாஸ்திரம், தர்ம நூல்கள், முன்னோர்கள் வழியே முடிவுகள் அமைய வேண்டும்.
இன்றைய உலகிற்கு பொருந்துமா?
இந்த வழி இன்றைய உலகிற்கு பொருந்துமா? ஆலோசனை சொல்பவர்கள் கருத்தை திணித்தால் என்ன செய்வது? சிந்திக்க வேண்டிய விஷயம்.
எனக்கு எழுத வராது, என்றாலும் மேலே உள்ள எழுதிய முயற்சியின் சுருக்கம்.
என்ன சொல்ல முயல்கிறேன்?
ஐவரை மணக்கலாமா? தர்மமா? இந்த கேள்வியை வியாசர் போன்ற பெரியவர்களிடம் பேசி, அது சரிதான் என்று முடிவு எடுக்கப்படுகிறது.
பாஞ்சாலி தந்தை பல பெரியவர்களின் உரையாடலின் உட்கருத்தை வைத்து அவர் திருப்தி படுத்தப்படுகிறார் அல்லது மறுக்கமுடியாத நிலைக்கு கொண்டுவரப்படுகிறார்.
அந்த உரையாடலில் பெண்ணுக்கு எந்த சுதந்திரமும் கொடுக்கப்படவில்லை. பெரியவர்களின் உரையாடல், பெண்ணின் தந்தையின் சம்மதம், மனப்பவர்களின் சம்மதம். அவ்வளவுதான்.
சோ எழுதிய பாரதத்தில் நான் புரிந்தது அப்படிதான். அந்த உரையாடலில், முன் பிறவி, முன்னொரு காலத்தில் இப்படி அல்லது அப்படி, அவர் இப்படி முடிவுகள் முந்தய காலத்து பெரியோர்களால் எடுக்கப்பட்டது. அந்த பெரியோர்கள் அறிவானவர்கள், ஞானிகள் என்று சொல்லப்படுகிறது.
நான் ஐவரை மணப்பது அல்லது உடன்கட்டையில் ஏற்றுவது சரி அல்லது தவறு என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.
ஆனால், அந்த முடிவுகள் எடுத்த விதம் தான் எனக்கு எண்ணமோ செய்கிறது.